India
கண்ணே தெரியல.. கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதிய 40 வாகனம் : நெடுஞ்சாலையில் நடந்த விபத்து!
உத்தர பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் நவம்பர் இறுதியில் தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை கடும் குளிர்காலம் நிலவும். அந்த வகையில் இந்த ஆண்டு வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 5 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவான குளிர் நிலவுவதால் காலை நேரங்களில் கடுமையான பனிமூட்டமும் நிலவி வருகிறது.
மேலும் நம் கண்ணுக்கு முன்னே என்ன இருக்கிறது என்று தெரியாத அளவிற்குப் பனிமூட்டம் இருக்கிறது. இதனால் வடமாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாரின் அர்னியா பகுதிகளில் பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து 40 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் பள்ளி வாகனம் ஒன்றும் விபத்தைச் சந்தித்துள்ளது. இதில் 8 குழந்தைகள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கடும் பனிமூட்டத்தினால் கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து பனிமூட்டத்தால் ஏற்படும் விபத்தை தவிர்க போதுமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த எட்டே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாடிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!