India
வெளிநாட்டு மாணவிக்கு மது கொடுத்து பாலியல் கொடுமை.. பேராசிரியரின் செயலால் ஹைதராபாத்தில் அதிர்ச்சி !
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இன்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அது தவிர வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடந்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பயிலும் தாய்லாந்து நாட்டை சேர்ந்த மனைவி ஒருவரை மாலை 4 மணி அளவில் படிப்புக்கு தேவைப்படும் புத்தகங்கள் தருவதாக பேராசிரியர் ஒருவர் அழைத்துள்ளார்.
இதனை நம்பிய அந்த வெளிநாட்டு மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பேராசிரியரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சிறிது நேரம் மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த பேராசிரியர் பின்னர் அந்த பெண்ணிடம் மது அருந்துமாறு கூறியுள்ளார்.
பின்னர் அந்த பெண் மது அருந்தியதும் பேராசிரியர் மாணவியிடம் தவறாக நடக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அங்கிருந்து உடனடியாக வெளியேறி சக மாணவர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழக வளாகத்தில் குவிந்து பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்ட நிலையில் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !