India
சரக்கு லாரியால் மூண்ட மோதல் : அஸ்ஸாம் - மேகாலயா எல்லையில் பதற்றம்.. துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி !
வட கிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம் மற்றும் மேகாலயா இடையே நீண்ட ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன.
அண்மையில் அஸ்ஸாம் மேகாலாயா இடையேயான எல்லை பிரச்சனை உக்கிரமாக வெடித்தது. அப்போது போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த சண்டையில் 6 பேர் பலியானார்கள்.
பின்னர் இரு மாநில எல்லை பிரச்சனையில் ஒன்றிய பா.ஜ.க அரசு தலையிட்டு, இருமாநில எல்லை கூட்டம் நடத்தியது. ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் சுமுக தீர்வுக் காணப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், மீண்டும் இரு மாநிலங்களுக்கு இடையே எல்லை பிரச்சனை எழுந்துள்ளது.
அஸ்ஸாம் - மேகாலயா எல்லையில் மரக்கட்டைகளுடன் லாரி ஒன்று சென்றுள்ளது. இதனை அஸ்ஸாம் வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது லாரி ஓட்டுநர் தப்பி முயறந்தால் வனத்துறை துப்பாக்குச் சூடு நடத்தி மூன்று பேரை பிடித்து சிறைபிடித்தனர்.
இந்த தகவல் மேகாலயா மாநிலத்தில் பரவியத்தைத் தொடர்ந்து, பயங்கர ஆயுதங்களுடன் சில கும்பல் அஸ்ஸாம் வனத்துறையை முற்றுகையிட்டது. அப்போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் எனகும்பல் வலியுறுத்தியது.
இதனால் ஆத்திரமடைந்த அஸ்ஸாம் போலிஸ் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அஸ்ஸாம் போலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6பேர் பலியானார்கள். இதனால் இருமாநில எல்லைகளிடையே மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
Also Read
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!