India
“பெண் உயிரிழப்பு விவகாரம்.. பா.ஜ.க MLA-வை புரட்டி எடுத்த தொகுதி மக்கள்” : தப்பியோடிய ஆதரவாளர்கள் !
கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள ஹுல்லேமனே குண்டூரில் என்ற கிராமத்ததில் யானை மிதித்து பெண்மணி ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினரை சந்திப்பதற்காக மூடி வரை தொகுதி எம்.எல்.ஏ குமாரசாமி கிராமத்திற்கு வருகை தந்தார்.
அப்போது கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி, எம்.எல்.ஏ-விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வனவிலங்குகள் தொடர்ந்து கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை கூறியும் அலட்சியமாக இருந்ததாக குற்றச்சாட்டு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் எம்.எல்.ஏ மீது தாக்குதல் நடத்தினர். இதில் எம்.எல்.ஏ.வின் சட்டை கிழிந்தவுடன் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலிஸார் உடனடியாக லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தினர்.
மேலும் எம்.எல்.ஏ மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற எம்.எல்.ஏ மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தாக்குதலின் போது உடன் சென்ற ஆதரவாளர்கள் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!