India
அக்குபஞ்சர் சிகிச்சை என்ற பெயரில் அந்தரங்க உறுப்புகளில் பாலியல் சீண்டல்.. போலி டாக்டர் சிக்கியது எப்படி?
கர்நாடக மாநிலம் பெங்களூரு மதிகெரெ பகுதியில் அக்குபஞ்சர் கிளினிக் வைத்து வருபவர் வெங்கடநாராயணா. இவர் சிகிச்சை அளிப்பதாக்கூறி, சிச்சைக்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாத இளம் பெண் ஒருவர் குற்றஞ்சாடியுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக யஷ்வந்த்பூர், பசவனகுடி மற்றும் சைபர் க்ரைம் காவல் நிலையத்திற்குச் சென்ற இளம் பெண் ஒருவர், வெங்கடநாராயணா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், தன்னை போன்ற கிளிக் வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுள்ளார் எனப் புகார் அளித்தார்.
அவர் அளித்தப்புகாரின் போரில் யஷ்வந்த்பூர், பசவனகுடி மற்றும் சைபர் க்ரைம் போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த வெங்கடநாராயணாவை தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போது, கடந்த நவம்பர் 16ம் தேதியை வெங்கடநாராயணாவை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.
போலிஸ் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவம் வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக வெங்கடநாராயணா சொன்ன வாக்குமூலத்தில், வெங்கடநாராயணா வெறும் 12ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதாகவும், தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
மேலும் ஒரு பயிற்சி வகுப்பில் அக்குபஞ்சர் மருத்துவம் பற்றித்தெரிந்துக்கொண்டு, இரண்டு வருடம் பயிற்சி எடுத்துள்ளார். அதன்பின்னர் இவரது வீட்டில் அருகே அக்குபஞ்சர் மையத்தை தொடங்கி சிகிச்சை அளித்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சைக்கு வரும் இளம் பெண்கள் மற்றும் குடும்ப பெண்களிடம் ஆடையை கழற்றச்சொல்லி, தகாத முறையில் நடந்துள்ளார். மேலும் சிகிச்சை என்ற பெயரில் அந்தரங்க உறுப்புகளில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு செய்யும் செய்கையை தனது செல்போனை மறைத்து வைத்து வீடியோவாக எடுத்து அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலிஸார் சிறையில் அடைத்துள்ளனர். சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!