India
சிவப்பு நிற சூட்கேஸில் இருந்த சடலம்.. அலறியடித்து ஓடிய பயணிகள்: பஞ்சாப் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?
பஞ்சாம் மாநிலத்தில் ஜலந்தர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். இந்நிலையில் இன்று ரயில் நிலையத்தில் காலையிலிருந்தே கேட்பாரற்று தனியாகப் பெரிய சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று இருந்தது.
இது குறித்து ரயில்வே ஊழியர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு போலிஸார்அங்கு வந்து சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில் சடலம் ஒன்று இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அது ஆண் சடலம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் ரயில் நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இளைஞர் ஒருவர் சூட்கேஸை விட்டுச் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் யார் என்பது குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சூட்கேஸில் எவ்விதமான ஆவணங்கள் இல்லாததால் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பதை போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு உடலை சூட்கேஸில் எடுத்து வந்தார்களா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!