India
சிவப்பு நிற சூட்கேஸில் இருந்த சடலம்.. அலறியடித்து ஓடிய பயணிகள்: பஞ்சாப் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?
பஞ்சாம் மாநிலத்தில் ஜலந்தர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். இந்நிலையில் இன்று ரயில் நிலையத்தில் காலையிலிருந்தே கேட்பாரற்று தனியாகப் பெரிய சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று இருந்தது.
இது குறித்து ரயில்வே ஊழியர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு போலிஸார்அங்கு வந்து சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில் சடலம் ஒன்று இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அது ஆண் சடலம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் ரயில் நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இளைஞர் ஒருவர் சூட்கேஸை விட்டுச் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் யார் என்பது குறித்தும் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சூட்கேஸில் எவ்விதமான ஆவணங்கள் இல்லாததால் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பதை போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு உடலை சூட்கேஸில் எடுத்து வந்தார்களா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!