India
திட்டிய ஆசிரியர்.. 14வது மாடியிலிருந்து குதித்த 10ம் வகுப்பு மாணவன்: பெங்களூருவில் பதறவைக்கும் சம்பவம்!
கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரத்தைச் சேர்ந்தவர் மோஹின். சிறுவனான இவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற தேர்வு ஒன்றில் மோஹின் பிட்டி அடித்துள்ளார்.
அப்போது ஆசிரியரிடம் சிறுவன் மாட்டிக் கொண்டுள்ளார். இதனால் ஆசிரியர்கள் அவரை கடுமையாகத் திட்டி தண்டனை கொடுத்துள்ளனர். பிறகு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது அடுக்குமாடிக் குடியிருப்பின் 14வது மாடிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்து குதித்தபோது கீழே விழாமல் மாடியில் உள்ள சுற்றில் சிக்கிக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்து சிறுவனைக் காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
அந்த நேரம் சிறுவன் அங்கிருந்து கீழே விழுந்தான்.இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான். இந்தச்சம்பம் குறித்து அறிந்த போலிஸார் அங்கு வந்து சிறுவன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் சிறுவன் இப்படி அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைந்து 14வது மாடிவரை சென்றான் என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் திட்டியதால் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்து 10 வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கலைஞரின் 103 ஆம் பிறந்த நாள் - 4 மாநிலங்களில் 103 பரப்புரைக் கூட்டங்கள் : ஆசிரியர் கி.வீரமணி அறிவிப்பு!
-
”உடன்பிறப்பே..! ஜூன்-3 நம் புத்தெழுச்சி நாள்..! உடன்பிறப்புகளுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்”
-
”வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. எகிறிய தேர்ச்சி விகிதம்.. அசத்திய மாணவிகள்” - முழு விவரம்!
-
”அ.தி.மு.க - வினருக்கு அமைச்சர் பதவி.. த.வெ.க-வின் மோசடி.. துணைபோகும் சபாநாயகர்” - முரசொலி விமர்சனம்!
-
“IND vs AFG Tour.. டெஸ்ட், ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.. புது வீரர்களுடன் அசத்தல் Squad”