India
"இதை நீங்கள் செய்துதான் பாருங்களேன்".. ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சவால் விட்ட நாராயணசாமி !
ஆளுநர்கள் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். அல்லது பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும் என புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, "புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தைச் சரியாகப் படிக்க வேண்டும்
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு எடுக்கும் முடிவுகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு என கூறுவதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
தெலுங்கானாவில் மக்களைச் சந்திப்பதாகச் சொல்லும் தமிழிசை சௌந்தரராஜன், எப்போது மக்களைச் சந்திக்கிறாரோ சொல்லட்டும். நான் அப்போது தெலுங்கான செல்கிறேன். நான் ஆளுநர் மாளிகையில் அவர் மக்களிடம் குறை கேட்பதைப் பார்க்க வேண்டும். அதை அவர் ஏற்றுக்கொள்வாரா? அப்படி அவர் ஆளுநர் மாளிகையில் மக்களைச் சந்தித்தால் அங்குள்ள ஆளும் கட்சியால் அவர் விரட்டி அடிக்கப்படுவார்.
ஆளுநர்கள் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்ய வேண்டும். புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடைபெறுகிறது. ரங்கசாமி முதலமைச்சராகவும் அவர் போட்டுள்ள சட்டை பா.ஜ.க-விற்குச் சொந்தமானது. பா.ஜ.க-விற்கு ரங்கசாமி அடிமையாகிவிட்டார்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!