India
எருமைக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞரை அடித்து உதைத்த பொதுமக்கள்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி !
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பாலியல் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. தினமும் செய்திகளில் அதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றது.
அதேபோல சமீபநாட்களாக விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதலும் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் எருமைக் கன்றுக்குட்டியை பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே, டெக்கான் பகுதியில் 38 வயதான நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் வேலை செய்துவருகிறார். அவர் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த எருமைக் கன்றுக்குட்டியை பலாத்காரம் செய்துள்ளார். இதனை அந்த பகுதியில் இருந்த ஒருவர் பார்த்து அங்கு இருப்பவர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
அதன்படி அங்கு திரண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக அடித்து போலிஸில் ஒப்படைத்துள்ளனர். அவர்மீது இயற்கைக்கு மாறான உறவு, மிருகவதை தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!