India
எருமைக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞரை அடித்து உதைத்த பொதுமக்கள்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி !
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பாலியல் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. தினமும் செய்திகளில் அதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றது.
அதேபோல சமீபநாட்களாக விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதலும் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் எருமைக் கன்றுக்குட்டியை பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே, டெக்கான் பகுதியில் 38 வயதான நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் வேலை செய்துவருகிறார். அவர் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த எருமைக் கன்றுக்குட்டியை பலாத்காரம் செய்துள்ளார். இதனை அந்த பகுதியில் இருந்த ஒருவர் பார்த்து அங்கு இருப்பவர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
அதன்படி அங்கு திரண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக அடித்து போலிஸில் ஒப்படைத்துள்ளனர். அவர்மீது இயற்கைக்கு மாறான உறவு, மிருகவதை தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”
-
இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைக்கிறாரா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!