India
தண்டவாளத்தில் இருந்த வெடிகுண்டு.. பந்து என நினைத்து விளையாடிய சிறுவர்கள்.. இறுதியில் நடந்த கொடூரம்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள காக்கினாரா மற்றும் ஜகத்தால் ரயில்வே நிலையங்களுக்கு இடையே இருந்த தண்டவாளம் அருகே சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது தண்டவாளம் அருகே ஒரு பொட்டலம் கிடந்ததுள்ளது. அதைக் கண்ட ஒரு சிறுவன் அதனை பந்து என நினைத்து கையில் எடுத்து விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பந்து திடீரென வெடித்துச் சிதறியது. அதில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த வெடிகுண்டு ரயிலுக்கு வைக்கப்பட்டதாக தெரியவந்தது.
இது தொடர்பாக பேசிய போலிஸார், தண்டவாளத்தில் சில சமூக விரோதிகளால் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்றும், இந்த விபத்தில் காயமடைந்த சிறுவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு அளிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பழிவாங்குதல் ஒன்றே பா.ஜ.க.வின் பாதை... நீதிமன்றத்தில் கொட்டு வாங்கினாலும் வெட்கம் இல்லை - முரசொலி!
-
தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு… 8.27 லட்சம் மாணவர்கள்… 3,412 மையங்கள் ரெடி!
-
“நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் உறுதிமொழி!
-
“அன்புக் குழந்தைகளே.. பதற்றமின்றி தேர்வை அணுகுங்கள்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
கோவையில் வனக்கோட்டம், மதுக்கரையில் தொழில்நுட்பம்.. வனவிலங்குகளை பாதுகாக்க ட்ரோன் கண்காணிப்பு பிரிவு!