India
கேரளாவை அடுத்து மத்திய பிரதேசத்தில்.. தெருநாய் கடித்ததில் 5 வயது சிறுமி பரிதாப பலி!
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகத் தெருநாய் கடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். தெருநாய்களைக் கட்டுப்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சிறுவர்களைத் தெருநாய் தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற துப்பாக்கி ஏந்தி சாலையில் ஒருவர் நடந்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கேரள மாநிலத்தைப் போன்று மத்திய பிரதேசத்திலும் தெருநாய் கடித்ததில் 5வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், கர்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த சோனியா என்ற 5 வயது சிறுமி தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையிலிருந்த ஆறு தெருநாய்கள் திடீரென சிறுமி மீது பாய்ந்து கடித்துள்ளது.
மேலும், சிறுமி தப்பித்து ஓடிவிடாதபடி தெருநாய்கள் சுற்றிவளைத்துக் கடித்துள்ளன. இதைப்பார்த்த பொதுமக்கள் நாய்களை விரட்டி அடித்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெருவில் நடந்து சென்ற 5 வயது சிறுமியைத் தெருநாய் கடித்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இனி அனுமதி இன்றி யாரையும் கைது செய்ய முடியாது : அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு விதித்த உச்சநீதிமன்றம் !
-
இது வெறும் டிரெய்லர்தான்... இந்தியா கூட்டணியின் முதல் வெற்றி - ஒன்றிய அரசை கதி கலங்க வைத்த கபில் சிபல் !
-
இஸ்லாமியர் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை : சர்ச்சையில் தூர்தர்ஷன் தொலைக்காச்சி : CPIM விமர்சனம் !
-
”பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது” : சரத்பவார் கடும் விமர்சனம்!
-
மியான்மர் ராணுவ புரட்சிக்கு உதவிய அதானி நிறுவனம் : நார்ஜெஸ் வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு!