India
32 ஏக்கர் நிலத்தை குரங்குகளுக்கு எழுதிக் கொடுத்த ஆச்சரிய கிராமம்.. இந்தியாவில் எங்கு உள்ளது இந்த கிராமம்?
உலகம் முழுவதும் நிலத்திற்காக குடும்பத்திற்குள் கொலை நடக்கும் இந்த காலத்தில் குரங்குகளுக்கு ஒரு கிராமம் 32 ஏக்கர் நிலத்தை சொந்தமாக எழுதி வைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ளது உப்லா என்ற கிராமம். இந்த கிராமத்தில் அதிகமான குரங்குகள் உள்ளது. இதனால் கிராம மக்கள் வீட்டிற்கு வரும் குரங்குகளை விரட்டி அடிக்காமல் அதற்குப் பழம் போன்ற உணவுகளைக் கொடுத்து தங்கள் குடும்பத்தில் ஒருவரைபோல் பழகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து குரங்குகளுக்கு என்று கிராமத்தில் 32 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளனர். இதற்கான ஆவணம் இந்த கிராமத்தில் உள்ளது. ஆனால் குரங்கிற்கு எப்போது இந்த நிலம் எழுதிக் கொடுக்கப்பட்டது என்று எந்த ஆவணங்களும் இல்லை.இருந்தாலும், அக்கிராம மக்கள் அந்த நிலத்தைக் குரங்குகள் பயன்படுத்தவே அனுமதித்து வருகின்றனர்.
இது குறித்துப் பேசிய அக்கிராம பஞ்சாயத்துத் தலைவர் பாப்பா பாட்வால், "32 ஏக்கர் நிலமும் குரங்குகளுக்குத்தான் சொந்தம் என்று ஆவணங்கள் தெளிவாகக் கூறுகின்றது. ஆனால் இது எப்போது செய்யப்பட்டது என்றுதான் தெரியவில்லை.
தற்போது கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் இருக்கின்றது. விலங்குகள் ஒரே இடத்தில் இருக்காது என்பதால் சில குரங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. முன்பு எல்லாம் கிராமத்தில் திருமணம் நடக்கும்போது எல்லாம் குரங்குகளுக்குப் பரிசு வழங்குவார்கள் அதன்பிறகுதான் விழாவே தொடங்கும். ஆனால் இந்த நடைமுறை தற்போது அனைவரும் பின்பற்றுவதில்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!