India
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை.. சூட்கேஸில் கிடந்த சடலம்.. டெல்லியில் அதிர்ச்சி !
நாட்டின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதேபோல டெல்லியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் குர்கான் அடுத்த இஃப்கோ சவுக் அருகே சாலையோர புதர்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இதனை அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பார்த்து காவல்நிலையத்துக்கு இது தொடர்பாக தகவல் அளித்துள்ளார்.
அதன்படி அந்த இடத்துக்கு வந்த போலிஸார் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில் நிர்வாண நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வெளிவந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த பெண்ணுக்கு 20 முதல் 25 வயது இருக்கலாம் எனவும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.
அந்தப் பெண் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் இடுப்பில் தீக்காயங்கள் போன்ற சில அடையாளங்கள் இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலிஸார் தனிப்படையை அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Also Read
-
“பாசிச பா.ஜ.க.வை தி.மு.கவின் உடன்பிறப்புகள் முறியடிப்பார்கள்...” - துணை முதலமைச்சர் எழுச்சிமிகு உரை!
-
“எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படுபவர் சரோஜாதேவி..” - முதலமைச்சர் இரங்கல்!
-
அடுத்தடுத்த நாளில் 2 துயரம்.. நாடோடி மன்னன் முதல் ஆதவன் வரை... பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!
-
"கழக அரசின் சாதனைகளை, மக்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருங்கள்"... துணை முதலமைச்சர் உதயநிதி வேண்டுகோள் !
-
தெற்கு ரயில்வேயின் அலட்சியத்தால் பறிபோன 3 உயிர்கள்... கேட்டை மூடாதது யார் தவறு? - முரசொலி விமர்சனம் !