India
தண்ணீர் பாட்டிலில் இருந்த பல்லி.. திரையரங்கில் படம் பார்க்க வந்தவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி!
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக ஹோட்டல்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்க வேண்டும் என ஹோட்டல் நிர்வாகத்திற்குத் தொடர்ச்சியாக வலியுறுத்தி எச்சரிக்கை செய்தும் வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் உணவில் காது குடையும் பஞ்சு, புழு, பல்லி இருக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் பிரபல திரையரங்க கேண்டீனில் விற்பனை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டிலில் பல்லி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே பிரபல திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்குப் படம் பார்க்க வந்த ஒருவர் திரையரங்கில் இருந்த கேண்டீனில் தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளனர். அப்போது அந்த தண்ணீர் பாட்டிலில் இறந்த சிலையில் பல்லி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் இது குறித்து அவர் கேண்டீன் ஊழியரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!