India
பணம் அனுப்பிட்டேன்..எங்க வரல: போலி App-யை பயன்படுத்தி விலை உயர்ந்த செல்போன் வாங்கும்போது சிக்கிய வாலிபர்!
புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள செல்போன் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இங்கு இளைஞர் ஒருவர் புதிதாக செல்போன் வாங்க வந்துள்ளார். பின்னர் ஒரு ஒரு புதிய செல்போன்களை பார்த்து விட்டு ரூ. 18 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வாங்கியுள்ளார்.
பிறகு அந்த வாலிபர் செல்போனுக்கான பணத்தை 'அமேசான் - பே' மூலம் அனுப்புவதாகக் கூறி அனுப்பியுள்ளார். அதன்படி, தனது செல்போனில் இருந்து ரூ. 18,000 அனுப்பி உள்ளார். ஆனால் கடை உரிமையாளருக்குப் பணம் அனுப்பியதற்கான குறுஞ்செய்தியோ அல்லது வங்கி கணக்கில் பணம் சேர்ந்ததற்கான தகவலோ ஏதுவும் வரவில்லை.
இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர் பணம் அனுப்பியாச்சி என செல்போனில் இருந்து காட்டியுள்ளார். திரும்பத் திருப்ப இதையே கூறியதால் வாலிபர் மீது கடை உரிமையாளருக்குச் சந்தேகம் எழுந்தது.
பின்னர் அந்த வாலிபரைப் பிடித்து விசாரித்ததில் அவர் போலி பண பரிவர்த்தனை செயலி மூலம் பணத்தை அனுப்பியதாக நாடகமாடியது தெரிய வந்தது. அதையடுத்து அந்த வாலிபரை ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பிறகு போலிஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட வாலிபர் மயிலாடுதுறை, மோழைவூர், மேலவளி பகுதியைப் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, 24 என்பதும், இதே பாணியில் பல்வேறு இடங்களில் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சத்தியமூர்த்தி மீது போலிஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!