India
லாட்டரி சீட்டுக்காக கொடூரம் ! 2 அப்பாவி பெண்களை நரபலி கொடுத்த தம்பதியினர்.. கேரளாவில் அதிர்ச்சி !
லாட்டரி சீட்டுக்கு என்று பெயர் போன மாநிலம் தான் கேரளா. இங்கு லாட்டரி சீட்டு வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணக்காரனாக ஆக வேண்டும் என்று மக்கள் பலரும் லாட்டரி சீட்டு வாங்குவர்.
அப்படி வாங்கியதில் சமீபத்தில் கூட கடன் தொல்லையால் தனது சொந்த வீட்டை விற்க முடிவு செய்த சில மணி நேரங்களில் லாட்டரி சீட்டில் லட்ச கணக்கில் பணம் விழுந்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது.
மேலும் அண்மையில் முடிந்த ஓணம் பண்டிகையின்போது கூட ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு கோடி கணக்கில் லாட்டரி சீட்டு விழுந்தது. அதோடு சுமார் 52 ஆண்டுகளாக ரூ.3.5 கோடிக்கு லாட்டரி சீட்டு வாங்கிய கூலித் தொழிலாளி ஒருவருக்கு வெறும் 5000 ரூபாய் பணம் கிடைத்த சோகமும் நடந்துள்ளது.
இந்த நிலையில் கொச்சியில் லாட்டரி சீட்டு பணத்திற்காக ஆசைப்பட்டு தம்பதியினர் ஒருவர் இரண்டு பெண்களை நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளா மாநிலம் கொச்சியில் வசித்து வந்த தர்மபுரியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் காணாமல் போனதாக கடந்த செப்டம்பர் மாதம் காணாமல் போனதாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இது தொடர்பாக லைலா மற்றும் பகவந்த் சிங் என்ற தம்பதியினரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பதில் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் அவர்களின் அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அதாவது கடந்த செப்டம்பர் மாதம் தர்மபுரியைச் சேர்ந்த பத்மா மற்றும் காலடியைச் சேர்ந்த ரோஸ்லி என்ற இரண்டு பெண்களை ஏமாற்றி இந்த தம்பதியினர் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்களை நரபலி கொடுத்தால் லாட்டரி சீட்டு பணம் விழும் என்ற மூடநம்பிக்கையில் பலி கொடுத்து புதைத்துள்ளனர். இதையடுத்து அவர்கள் புதைத்த இடத்தை தம்பதியினர் சொல்லவே, அங்கே சென்ற அதிகாரிகள் இருந்த சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
இதையடுத்து குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது அதிகாரிகள் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் வேறேதும் குற்றவாளிகள் உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!