India
அடுத்தடுத்து சிக்கும் போதைப் பொருள்.. கடத்தல்காரர்களுக்கு புகலிடமாக மாறும் குஜராத் துறைமுகங்கள்?
குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகங்களில் தொடர்ச்சியாகப் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது பலரையும் அதிர்ச்சியடை வைத்துள்ளது. இதனால் குஜராத் துறை முகங்களைப் போதைப் பொருட்களைக் கடத்துவதற்குப் புகலிடமாக மாறியுள்ளதா என்ற கேள்வியை காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் ரூ.350 கோடி மதிப்பில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஜகாவ் துறைமுகத்தில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படகு ஒன்றின் நடமாட்டம் இருந்ததைக் கடலோர காவல் படையினர் கண்டிருந்துள்ளனர்.
இதையடுத்து அந்த படகை அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். பிறகு படகை சோதனை செய்தபோது ரூ. 350 கோடி மதிப்பில் ஹெராயின் போதைப் பொருட்களைப் பதுக்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் போலிஸார் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் படகிலிருந்த 6 பேரை கைது செய்து போதைப் பொருள் எங்கே கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !