India
அடுத்தடுத்து சிக்கும் போதைப் பொருள்.. கடத்தல்காரர்களுக்கு புகலிடமாக மாறும் குஜராத் துறைமுகங்கள்?
குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகங்களில் தொடர்ச்சியாகப் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது பலரையும் அதிர்ச்சியடை வைத்துள்ளது. இதனால் குஜராத் துறை முகங்களைப் போதைப் பொருட்களைக் கடத்துவதற்குப் புகலிடமாக மாறியுள்ளதா என்ற கேள்வியை காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் ரூ.350 கோடி மதிப்பில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஜகாவ் துறைமுகத்தில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படகு ஒன்றின் நடமாட்டம் இருந்ததைக் கடலோர காவல் படையினர் கண்டிருந்துள்ளனர்.
இதையடுத்து அந்த படகை அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். பிறகு படகை சோதனை செய்தபோது ரூ. 350 கோடி மதிப்பில் ஹெராயின் போதைப் பொருட்களைப் பதுக்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் போலிஸார் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் படகிலிருந்த 6 பேரை கைது செய்து போதைப் பொருள் எங்கே கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
-
”அடுத்தடுத்த அரிவாள் வெட்டு.. அச்சத்தில் மக்கள்.. தறிகெட்டுப் போன சட்டம் ஒழுங்கு” : முழு விவரம்!
-
நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி