India
அடுத்தடுத்து சிக்கும் போதைப் பொருள்.. கடத்தல்காரர்களுக்கு புகலிடமாக மாறும் குஜராத் துறைமுகங்கள்?
குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகங்களில் தொடர்ச்சியாகப் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது பலரையும் அதிர்ச்சியடை வைத்துள்ளது. இதனால் குஜராத் துறை முகங்களைப் போதைப் பொருட்களைக் கடத்துவதற்குப் புகலிடமாக மாறியுள்ளதா என்ற கேள்வியை காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் ரூ.350 கோடி மதிப்பில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஜகாவ் துறைமுகத்தில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படகு ஒன்றின் நடமாட்டம் இருந்ததைக் கடலோர காவல் படையினர் கண்டிருந்துள்ளனர்.
இதையடுத்து அந்த படகை அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். பிறகு படகை சோதனை செய்தபோது ரூ. 350 கோடி மதிப்பில் ஹெராயின் போதைப் பொருட்களைப் பதுக்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் போலிஸார் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் படகிலிருந்த 6 பேரை கைது செய்து போதைப் பொருள் எங்கே கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!