India
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 40 பேர்.. 8 பேர் சடலமாக மீட்பு: மேற்குவங்கத்தில் தசரா விழாவில் நடந்த சோகம்!
மேற்குவங்க மாநிலத்தில் தசரா விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின் இறுதி நாளில் துர்கா சிலையைப் பொதுமக்கள் ஆற்றில் கரைப்பார்கள்.
இந்த வகையில் ஜல்பைக்குரி மாவட்டத்தின் மல்பஜாரில் ஓடும் மால் ஆற்றில் பொதுமக்கள் பலர் துர்கா சிலையைக் கரைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 40க்கும் மேற்பட்டோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் 8 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாநில பேரிடர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்புப் பணியில் ஈடுபட்டு தீவிரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து விபத்திற்கு மேற்கு வங்க மாநில முதல்வர், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!