India
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன் ! -உ.பி-யில் அதிர்ச்சி !
உத்தரப் பிரதேச மாநிலம் உக்ஹைதி என்ற பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவன் தனியாக விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பார்த்துள்ளார்.
பின்னர் சிறுவன் அந்த சிறுமியை அழைத்து அவரை தனியே ஒரு இடத்துக்கு கூட்டிசென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுமி தள்ளாடியபடி வீட்டுக்கு வந்துள்ளார்.
சிறுமியின் நிலை குறித்து அவரது பெற்றோர் கேட்டபோது தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி சிறுமி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து போலிஸில் புகார் அளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிஸார், அந்த சிறுவனை கைது செய்துள்ளனர். 12 வயது சிறுவன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவம் நடந்துவருவதற்கு மாநில அரசை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!