India
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன் ! -உ.பி-யில் அதிர்ச்சி !
உத்தரப் பிரதேச மாநிலம் உக்ஹைதி என்ற பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவன் தனியாக விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பார்த்துள்ளார்.
பின்னர் சிறுவன் அந்த சிறுமியை அழைத்து அவரை தனியே ஒரு இடத்துக்கு கூட்டிசென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுமி தள்ளாடியபடி வீட்டுக்கு வந்துள்ளார்.
சிறுமியின் நிலை குறித்து அவரது பெற்றோர் கேட்டபோது தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி சிறுமி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து போலிஸில் புகார் அளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிஸார், அந்த சிறுவனை கைது செய்துள்ளனர். 12 வயது சிறுவன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவம் நடந்துவருவதற்கு மாநில அரசை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?