India
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன் ! -உ.பி-யில் அதிர்ச்சி !
உத்தரப் பிரதேச மாநிலம் உக்ஹைதி என்ற பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவன் தனியாக விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பார்த்துள்ளார்.
பின்னர் சிறுவன் அந்த சிறுமியை அழைத்து அவரை தனியே ஒரு இடத்துக்கு கூட்டிசென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுமி தள்ளாடியபடி வீட்டுக்கு வந்துள்ளார்.
சிறுமியின் நிலை குறித்து அவரது பெற்றோர் கேட்டபோது தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி சிறுமி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து போலிஸில் புகார் அளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிஸார், அந்த சிறுவனை கைது செய்துள்ளனர். 12 வயது சிறுவன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவம் நடந்துவருவதற்கு மாநில அரசை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.
Also Read
-
SAAF தொடரில் பதக்கம் வென்று அசத்திய தமிழர்கள்.. ரூ.40.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் பாராட்டு!
-
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !