India
கோவிலுக்கு வந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி.. வீடியோ எடுத்து மிரட்டியதால் அதிர்ச்சி !
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒற்றசேகரமங்கலம் மைலச்சல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோனு என்ற வினீஷ் (வயது 32). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில், மாரநல்லூர் என்ற பகுதியில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் பணிபுரிந்து வந்த கோயிளுக்கு அடிக்கடி வரும் ஒரு பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியதால், தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் அதனை விடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.
இதையடுத்து ஒரு கட்டத்தில் அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்ட நிலையில், சோனு அவரை தவிர்த்து வந்துள்ளார். மேலும் தன்னை தொந்தரவு செய்தால், எடுத்த வீடியோவை இணையத்தில் விட்டு விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.
இதனால் அந்த பெண் இது குறித்து காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சோனுவை தேடி வந்தனர். ஆனால் சோனு அதற்குள் தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து அவரை தீவிரமாக தேடி வந்த அதிகாரிகள், வேறு இடத்தில் பூசாரியாக இருந்து வேலை பார்த்து வந்த சோனுவை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !