India
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட கும்பல்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி !
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர் அதனை வீடியோவாக பதிவுசெய்த அந்த கும்பல் அதை வைத்து அந்த சிறியை பலமுறை மிரட்டி வந்துள்ளனர்.
அதோடு அந்த பாலியல் வன்கொடுமை வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனது பெற்றோருடன் இதுகுறித்து போலிஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தியபோது பல உண்மைகள் வெளிவந்துள்ளது.
அந்த கும்பல் முதலில் சிறுமியிடம் 50,000 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். அதோடு மேலும் 2.5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். மேலும் பணம் தர மறுத்தால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என்று தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் காவல்துறை பொறுப்பாளர் அமித் சவுத்ரி கூறுகையில், "பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, தனது மகளை அதே கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். புகார் எடுக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கொ.ம.தே.க-விற்கு 2 சீட் ஒதுக்கீடு: கொங்கு மண்டலத்தில் தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும் - ஈஸ்வரன் பேட்டி!
-
தூத்துக்குடியில் ரூ.13,000 கோடியில் மிக உய்ய அனல் மின் நிலையம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
-
“இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!