India
உ.பி: வகுப்பறையில் பூட்டப்பட்ட சிறுமி..வீடு திருப்பாத மகளை தேடி சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச மாநில பள்ளிகள் தொடர்ந்து ஏராளமான சர்ச்சையில் சிக்கிவருகிறது. மேலும், பள்ளிக்கல்வித்துறை மேலும் ஏராளமான புகார்கள் எழுந்தவண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், அங்கு பள்ளியில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் செயல்படும் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் பள்ளி முடிந்து வெகுநேரம் ஆகியும் அந்த மாணவி வீட்டுக்கு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், அங்கு ஏதும் விவரம் தெரியாததால் மாணவியின் வகுப்பு அறை அருகே சென்றுள்ளனர். அப்போது அந்த அறைக்குள் இருந்து சிறுமியின் சத்தம் கேட்டுள்ளது.
உடனே சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக பள்ளியின் கதவை திறந்து உள்ளே சென்றபோது சிறுமி வகுப்பறையில் அழுதுகொண்டிருந்துள்ளார். பின்னர் உடனே சிறுமியின் பெற்றோர் சிறுமியை அழைத்துச்சென்றுள்ளனர்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த பகுதியில் யூனியன் தேர்தல் நடைபெறவிருந்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளை ஊழியர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு முன்பே சென்றது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் மற்றும் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!