India
CPIM மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார் - அரசியல் கட்சியினர் இரங்கல்!
கேரள மாநிலம் தலசோரி மாவட்டம் கொடியேரி பகுதியைச் சேர்ந்தவர் கொடியேரி பாலகிருஷ்ணன் (69). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும், கேரள மாநிலத்தின் முன்னாள் மாநிலச் செயலாளராக இருந்தவர் கொடியேரி பாலகிருஷ்ணன். கேரள மாநில உள்துறை அமைச்சராக இருந்தவர்.
இந்நிலையில், கொடியேரி பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். முன்னதாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகி, கேரளாவில் உள்ள ஏ.கே.ஜி சென்டர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஓய்வெடுத்து வந்தார்.
பின்னர் தீவிர உடல்நிலை பாதிப்பை அடுத்து சென்னை கீரிஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி கொடியேரி பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“எடப்பாடி பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலை!” : வீரபாண்டியன் கண்டனம்!
-
“இலங்கையின் கைப்பிடியில் 61 மீனவர்கள், 248 மீன்பிடிப் படகுகள்!” : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
கோவையில் ‘சி. சுப்பிரமணியம்’ பெயரில் உயர்மட்ட மேம்பாலம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை-விவரம்!
-
திருமணம் ஆகாத இளைஞர்களே குறி... 19 வயதில் 8 ஆண்களை ஏமாற்றிய ஆந்திராவின் கல்யாண ரா(வா)ணி!