India
5 கிராமங்கள்.. 12 பேரை கடித்த பிட்புல் நாய் அடுத்து கொலை: பஞ்சாபில் அதிர்ச்சி!
நாய் வகைகளிலே மிகவும் ஆபத்தான பிட்புல் நாய். வேட்டைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த நாயை இந்தியாவில் சிலர் தங்கள் வீட்டில் வளர்த்து வருகின்றனர்.
ஆனால், அண்மைக் காலமாக உரிமையாளர்களையே பிட்புல் நாய் கடித்த சம்பவத்தை நாம் பார்த்திருப்போம். மேலும் மாடுகளைக் கூட இந்த நாய் விட்டு வைக்காமல் கடித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாபில் 12 பேரைக் கடித்துக் குதறிய பிட்புல் நாய் அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரைச் சேர்ந்த ஒருவர் பிட்புல் நாயை வளர்ந்து வந்துள்ளார். இந்த நாய் திடீரென வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளது.
இதையடுத்து அந்த நாய் 5 கிராமங்களுக்குச் சுற்றித்திரிந்து கண்ணில் படுபவர்களை எல்லாம் கடித்துக் குதறியுள்ளது. இதுவரை 12 பேரை இந்த பிட்புல் நாய் கடித்துள்ளது.
இந்நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சக்தி சிங் என்பவரைக் கடித்தபோது அவர் தற்காப்புக்கா நாயை அடித்தே கொலை செய்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட 5 கிராம மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !