India
5 கிராமங்கள்.. 12 பேரை கடித்த பிட்புல் நாய் அடுத்து கொலை: பஞ்சாபில் அதிர்ச்சி!
நாய் வகைகளிலே மிகவும் ஆபத்தான பிட்புல் நாய். வேட்டைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த நாயை இந்தியாவில் சிலர் தங்கள் வீட்டில் வளர்த்து வருகின்றனர்.
ஆனால், அண்மைக் காலமாக உரிமையாளர்களையே பிட்புல் நாய் கடித்த சம்பவத்தை நாம் பார்த்திருப்போம். மேலும் மாடுகளைக் கூட இந்த நாய் விட்டு வைக்காமல் கடித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாபில் 12 பேரைக் கடித்துக் குதறிய பிட்புல் நாய் அடித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரைச் சேர்ந்த ஒருவர் பிட்புல் நாயை வளர்ந்து வந்துள்ளார். இந்த நாய் திடீரென வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளது.
இதையடுத்து அந்த நாய் 5 கிராமங்களுக்குச் சுற்றித்திரிந்து கண்ணில் படுபவர்களை எல்லாம் கடித்துக் குதறியுள்ளது. இதுவரை 12 பேரை இந்த பிட்புல் நாய் கடித்துள்ளது.
இந்நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சக்தி சிங் என்பவரைக் கடித்தபோது அவர் தற்காப்புக்கா நாயை அடித்தே கொலை செய்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட 5 கிராம மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
Also Read
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!