India
கட்டி முடிக்கும் முன்பே சீட்டுக்கட்டு போல இடிந்து விழுந்த பாலம்.. குஜராத்தில் அதிர்ச்சி !
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள போர்சாத் சவுக்கில் என்ற பகுதியின் தண்டி யாத்ரா மார்க் என்ற இடத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திடீரென இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மேம்பாலத்தின் அடியில் உள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மேம்பாலம் இடிந்து விழுந்த வீடியோவை பகிர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்திலேயே இதுபோன்று நடந்துள்ளதாக, காங்கிரஸ் தேசிய ஊடக குழு உறுப்பினர் சுரேந்திர ராஜ்புத் விமர்சித்துள்ளார்.
தனது பதிவில், "இது கடவுளின் செயல் அல்ல, மோசடிகளின் செயல் இது, மோடியின் குஜராத் மாடலின் வழியில் கட்டப்பட்ட பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்தது" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!