India
கட்டி முடிக்கும் முன்பே சீட்டுக்கட்டு போல இடிந்து விழுந்த பாலம்.. குஜராத்தில் அதிர்ச்சி !
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள போர்சாத் சவுக்கில் என்ற பகுதியின் தண்டி யாத்ரா மார்க் என்ற இடத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திடீரென இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மேம்பாலத்தின் அடியில் உள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மேம்பாலம் இடிந்து விழுந்த வீடியோவை பகிர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்திலேயே இதுபோன்று நடந்துள்ளதாக, காங்கிரஸ் தேசிய ஊடக குழு உறுப்பினர் சுரேந்திர ராஜ்புத் விமர்சித்துள்ளார்.
தனது பதிவில், "இது கடவுளின் செயல் அல்ல, மோசடிகளின் செயல் இது, மோடியின் குஜராத் மாடலின் வழியில் கட்டப்பட்ட பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்தது" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.165 கோடியில் கட்டப்பட்டு வரும் 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்! : உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
“நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும்!” : SIR குறித்து எச்சரித்த முரசொலி தலையங்கம்!
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா