India
திருமணம் செய்யச் சொன்னதால் ஆத்திரம்.. காதலியை கொலை செய்த வாலிபர்: ஜார்க்கண்டில் அதிர்ச்சி!
ஜார்க்கண்ட் மாநிலம், ஹல்டியா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார்.
இதையடுத்து காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி காதலி வலியுறுத்தியுள்ளார். ஆனால் இவரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவரை பார்ப்பதைத் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் காதலர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்க சண்டையும் வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் படி காதலனிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த காதலன் அடித்தே காதலியைக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரே காவல்நிலையம் சென்று சரணடைந்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
-
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !