India
திருமணம் செய்யச் சொன்னதால் ஆத்திரம்.. காதலியை கொலை செய்த வாலிபர்: ஜார்க்கண்டில் அதிர்ச்சி!
ஜார்க்கண்ட் மாநிலம், ஹல்டியா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார்.
இதையடுத்து காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி காதலி வலியுறுத்தியுள்ளார். ஆனால் இவரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவரை பார்ப்பதைத் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் காதலர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்க சண்டையும் வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் படி காதலனிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த காதலன் அடித்தே காதலியைக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரே காவல்நிலையம் சென்று சரணடைந்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிப்பு… தேர்தல் நாளன்று பொது விடுமுறை.. வெளியான அரசாணை! - முழு விவரம் உள்ளே!
-
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? : அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த கி.வீரமணி!
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!