India
இறந்த உடலை பிரேதப்பரிசோதனை செய்த பட்டியலின மருத்துவர்:உடலை வாங்க மறுத்த உறவினர்கள்.. ஒடிசாவில் அதிர்ச்சி!
ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் முச்சுனு சந்தா. கூலித்தொழிலாளியான இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலயில், இவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பட்டியல் சமூகத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் அந்த உடலுக்கு பிரதேப்பரிசோதனை செய்தார்.
பின்னர் அவரது உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அந்த உடலுக்கு பட்டியல் சமூகத்தை சேர்ந்த மருத்துவர் பிரதேப்பரிசோதனை செய்துள்ளது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. அதன்பின்னர் கிராம மக்களும் உறவினர்களும், முச்சுனு சந்தாவின் உடலை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் கிராம பஞ்சாயத்து பெண் தலைவரின் கணவர் சுனில் பெஹரா என்பவர் ஆம்புலன்ஸை வரவழைத்து முச்சுனுவின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்தார். ஆனால் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை சரியில்லாததால் ஆம்புலன்ஸ் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சுனில் பெஹரா, தனது பைக்கில் முச்சுனுவின் உடலை கட்டிக் ெகாண்டு, ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் உதவியுடன் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அங்கு உடலை தகனம் செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!