India
நீரில் மூழ்கிய புல்டோசர்..சேதமடைந்த பாலத்தை இடித்த போது நடந்த அசம்பாவிதம்.. உ.பியில் அதிர்ச்சி !
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் பாயும் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கால்வாய் பாலம் சேதமடைந்தது. இதனை சரிசெய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கூறி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அதை சீரமைக்க அரசு முன்வந்தது. அந்த பாலத்தை இடித்து அதே இடத்தில் புதிய பாலத்தை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கங்கை நதியின் கால்வாயின் ஒருபக்கத்தில் இருந்து புல்டோசர் மூலம் பாலத்தின் மற்றொரு பகுதி இடித்து தகர்க்கப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக புல்டோசர் நின்றுகொண்டிருந்த பகுதியும் இடிந்து விழுந்தது. இதில் புல்டோசர் தலைக்குப்புற கவிழ்ந்து ஆற்றில் மூழ்கியது.
இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புல்டோசர் டிரைவரை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
விஜயின் திடீர் கரூர் பயணம் எதற்காக? : உண்மையை உரக்கச் சொன்ன முரசொலி!
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!