India

மோரில் கலக்கப்பட்ட தூக்கமாத்திரை.. மூன்று மாதங்களுக்கு பிறகு சிக்கிய மனைவி.. பின்னணி என்ன ?

ஆந்திர மாநிலம் பாலாந்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோலா சுப்பாராவ். இவருக்கும் அப்பு மில்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த வெங்கட லட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில் இவர்களுக்குள் கடந்த சில நாட்களாக மனஸ்தாபம் ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் வேங்கட லட்சுமிக்கு சீனிவாஸ் என்பவருடன் நட்புறவு ஏற்பட்டுள்ளது. இந்த நட்புறவு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களது பழக்கம் கணவரின் குடும்பத்தாருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் தனது கணவருக்கும் தெரியவந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்துள்ளார். இந்த பயத்தில் தனது கணவர் சுப்பாராவை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

எனவே அதன்படி கடந்த ஜூன் மாதம் ஒரு நாள் இரவு தனது கணவருக்கு கொடுக்கப்பட்ட மோரில் அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் காலை அவர் தனது கணவரை எழுப்பும்போது அவர் எழவில்லை என்பதால் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக கூறி தனது உறவினர்களிடம் கதறி அழுது நாடகமாடியுள்ளார். இதயடுத்து கணவர் சுப்பாராவுக்கு இறுதிசடங்கு நடத்தி முடிக்கப்பட்டது.

கணவர் இறந்தபின்பு மனைவி வெங்கட லட்சுமி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்திருக்கிறார். மேலும் சீனிவாஸ் என்பவருடன் இன்னும் நெருக்கமாக இருந்து வந்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த சுப்பாராவின் குடும்பத்தார் சுமார் 3 மாதங்களுக்கு பிறகு காவல்நிலையத்தில் சுப்பாராவ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்துள்ள்ளனர்.

பின்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது லட்சுமியின் பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தான்தான் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் வெங்கட லட்சுமி.

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய கைது செய்து சிறையில் அடைத்தனர். 3 மாதங்களுக்கு பிறகு கணவனை கொன்ற வழக்கில் மனைவி சிக்கியுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விடுதி பணிப்பெண்ணை பாலியல் தொழிலுக்கு அழைத்த பா.ஜ.க தலைவரின் மகன் - கொலை செய்து ஆற்றில் வீசிய கொடூரம்!