India
Amazon நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இணைய தளத்தில் செல்போன் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி அமேசான் தளத்திலிருந்த பிரஷர் குக்கர் ஒன்றை 2265 வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.
அப்போதுதான் இந்த பிரஷர் குக்கர் தரமற்றது என்றும் அதில் இந்தியத் தரச் சான்றான BIS இல்லாமல் விற்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அமேசான் தளத்தின் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நுகர்வோர் பாதுகாப்பு விதியை அமேசான் நிறுவனம் கடைபிடிக்கவில்லை என கூறி இந்நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர்.
மேலும் தரமற்ற பிரஷர் குக்கர்களை திரும்பப் பெற வேண்டும் எனவும் நுகர்வோருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 16ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Also Read
-
தமிழ்நாட்டு வீரர்களின் கனவை நனவாக்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை: துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
Champions Of Tamil Nadu விழா : 1172 வீரர்களுக்கு ரூ.33.50 கோடி உயரிய ஊக்கத் தொகை வழங்கிய CM MK Stalin!
-
“இளைஞர்களுக்கு படிப்பும் விளையாட்டும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
தொடங்குகிறது ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் - வீடு வீடாகப் பரப்புரை’: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!
-
சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு... : சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பெற்ற 10 முக்கிய அம்சங்கள்!