India
மாநில அளவிலான கபடிப் போட்டி.. வீராங்கனைகளுக்கு கழிவறையில் பரிமாறப்பட்ட உணவு.. பாஜக ஆளும் உ.பியின் அவலம் !
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரான்பூர் மாவட்டத்தில், 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான மாநில அளவு கபடி போட்டி நடைபெற்றுள்ளது. அப்போது அதில் பங்கேற்ற சிறுமிகளுக்கு கழிவறைக்குள் வைத்து அதுவும் சிறுநீர் கழிக்க பயன்படுத்தும் இடத்தின் அருகில் வைத்து உணவு பரிமாறப்பட்டுள்ளது.
அதிலும், கழிவறையில் நடுப்பகுதியில் தரையில் ஒரு பேப்பர் விரிக்கப்பட்டு அதில் பூரிகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது அனைத்தும் திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிலும் இந்த மைதானத்தில் இந்த கழிவறையைதான் அனைவரும் பயன்படுத்துவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் கழிவறையில் சமையலுக்கான உணவு பொருள்கள் வைக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கபடி வீராங்கனைகளை உத்தரபிரதேச பாஜக அரசு அவமதித்து விட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த மைதானத்தின் பெயர் பீமாராவ் அம்பேத்கர் மைதானம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இடப்பற்றாக்குறை காரணமாக கழிவறையில் வைத்து உணவு பரிமாறப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
இணையவழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துபவர்களுக்கு தமிழ்நாடு அரசு பகிரங்க எச்சரிக்கை... - முழு விவரம் !
-
தருமபுரியில் 30 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : தமிழ்நாட்டில் தகிக்கும் கோடை வெப்பம் !
-
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் விவகாரம் : பிரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்த பாஜக - குவியும் கண்டனம்!
-
ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் சிக்கிய கண்டெய்னர்கள்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி - விவரம் என்ன ?
-
போதை பொருள்வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை !