India
மாநில அளவிலான கபடிப் போட்டி.. வீராங்கனைகளுக்கு கழிவறையில் பரிமாறப்பட்ட உணவு.. பாஜக ஆளும் உ.பியின் அவலம் !
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரான்பூர் மாவட்டத்தில், 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான மாநில அளவு கபடி போட்டி நடைபெற்றுள்ளது. அப்போது அதில் பங்கேற்ற சிறுமிகளுக்கு கழிவறைக்குள் வைத்து அதுவும் சிறுநீர் கழிக்க பயன்படுத்தும் இடத்தின் அருகில் வைத்து உணவு பரிமாறப்பட்டுள்ளது.
அதிலும், கழிவறையில் நடுப்பகுதியில் தரையில் ஒரு பேப்பர் விரிக்கப்பட்டு அதில் பூரிகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது அனைத்தும் திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிலும் இந்த மைதானத்தில் இந்த கழிவறையைதான் அனைவரும் பயன்படுத்துவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் கழிவறையில் சமையலுக்கான உணவு பொருள்கள் வைக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கபடி வீராங்கனைகளை உத்தரபிரதேச பாஜக அரசு அவமதித்து விட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த மைதானத்தின் பெயர் பீமாராவ் அம்பேத்கர் மைதானம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இடப்பற்றாக்குறை காரணமாக கழிவறையில் வைத்து உணவு பரிமாறப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
வெளியான வாக்காளர் இறுதிப்பட்டியல்... உங்கள் பெயர் உள்ளதா? - முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்!
-
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி: இந்திய அணியில் மாற்றம் நிகழுமா? அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?
-
“உங்கள் தூக்கத்தை கெடுத்த surgical strike” - பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!
-
“மாணவர் நலனில் அக்கறை இருப்பதுபோல், நீலிக்கண்ணீர் வடிக்கும் அன்புமணி” : அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!