India
மாநில அளவிலான கபடிப் போட்டி.. வீராங்கனைகளுக்கு கழிவறையில் பரிமாறப்பட்ட உணவு.. பாஜக ஆளும் உ.பியின் அவலம் !
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரான்பூர் மாவட்டத்தில், 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான மாநில அளவு கபடி போட்டி நடைபெற்றுள்ளது. அப்போது அதில் பங்கேற்ற சிறுமிகளுக்கு கழிவறைக்குள் வைத்து அதுவும் சிறுநீர் கழிக்க பயன்படுத்தும் இடத்தின் அருகில் வைத்து உணவு பரிமாறப்பட்டுள்ளது.
அதிலும், கழிவறையில் நடுப்பகுதியில் தரையில் ஒரு பேப்பர் விரிக்கப்பட்டு அதில் பூரிகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது அனைத்தும் திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிலும் இந்த மைதானத்தில் இந்த கழிவறையைதான் அனைவரும் பயன்படுத்துவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் கழிவறையில் சமையலுக்கான உணவு பொருள்கள் வைக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கபடி வீராங்கனைகளை உத்தரபிரதேச பாஜக அரசு அவமதித்து விட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த மைதானத்தின் பெயர் பீமாராவ் அம்பேத்கர் மைதானம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இடப்பற்றாக்குறை காரணமாக கழிவறையில் வைத்து உணவு பரிமாறப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!