India
காவல்நிலையத்தை ஒயின்ஷாப்பாக மாற்றிய கர்நாடகா போலிஸ்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்திற்குப்பட்டது கவுலிப்பள்ளி காவல் நிலையம். இந்த காவல்நிலையத்தில் நேற்று இரவு பணியிலிருந்த மூன்று போலிஸார் மேசை மீது இருந்து புகார் கோப்புகளைக் கீழே தள்ளிவிட்டு, அதில் மது பாட்டில்களை அடிக்கி வைத்துள்ளனர்.
பின்னர் மூன்று போலிஸார் அமர்ந்து மது குடித்துள்ளனர். போதையில் இவர்களே தங்கள் மது குடிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த இணைய வாசிகள் பலரும் காவல்நிலையத்தில் மது குடித்த மூன்று போலிஸார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் குற்றங்களைத் தடுக்கும் போலிஸாரே குற்றச் செயலில் ஈடுபடுவது நியாயமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கர்நாடகா டி.ஜி.பி தெரிவித்துள்ளார். வேலியே பயிரை மேய்வது என்ற பழமொழிக்குக் கர்நாடகா போலிஸாரி இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!