India
காவல்நிலையத்தை ஒயின்ஷாப்பாக மாற்றிய கர்நாடகா போலிஸ்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்திற்குப்பட்டது கவுலிப்பள்ளி காவல் நிலையம். இந்த காவல்நிலையத்தில் நேற்று இரவு பணியிலிருந்த மூன்று போலிஸார் மேசை மீது இருந்து புகார் கோப்புகளைக் கீழே தள்ளிவிட்டு, அதில் மது பாட்டில்களை அடிக்கி வைத்துள்ளனர்.
பின்னர் மூன்று போலிஸார் அமர்ந்து மது குடித்துள்ளனர். போதையில் இவர்களே தங்கள் மது குடிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த இணைய வாசிகள் பலரும் காவல்நிலையத்தில் மது குடித்த மூன்று போலிஸார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் குற்றங்களைத் தடுக்கும் போலிஸாரே குற்றச் செயலில் ஈடுபடுவது நியாயமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கர்நாடகா டி.ஜி.பி தெரிவித்துள்ளார். வேலியே பயிரை மேய்வது என்ற பழமொழிக்குக் கர்நாடகா போலிஸாரி இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!