India

பிடித்த உணவை சமைத்து தராததால் விரக்தி.. சிறுமி எடுத்த விபரீத முடிவால் சோகம் ! - உத்தராகண்ட்டில் பரபரப்பு!

உத்தராகண்ட் மாநிலம் ராய்ப்பூர் நகரிலுள்ள தாதா லோகண்ட் என்ற பகுதியில் பெற்றோருடன் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சாப்பிடுவதற்காக வந்து அமர்ந்துள்ளார். அப்போது தாய் சாப்பாட்டை பரிமாற, உடனே "இது நல்லா இல்லை.. வேறு உணவை சமைத்து தாங்க" என்று கேட்டுள்ளார். அதற்கு தாயோ முடியாது என்றும், இதையே சாப்பிடுமாறும் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் வேதனையடைந்த சிறுமி, விருப்பமான சாப்பாடு கிடைக்காத விரக்தியால் சாப்பிடாமல் தனது அறைக்கு சென்று கதவை பூட்டியுள்ளார். பெற்றோரும் வழக்கமாக கோபித்து கொண்டு போவதாக எண்ணி அதனை அப்படியே விட்டுள்ளனர்.

இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் சிறுமி வராததால் சாப்பிட அழைத்துள்ளனர். அப்போதும் வரவில்லை என்பதால் அவரது அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கவும் படவில்லை; சிறுமியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துள்ளனர். அப்போது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடித்த உணவு கிடைக்கவில்லை என்பதற்காக சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: டிராக்டரை பறிமுதல் செய்த ஊழியர்கள்.. தடுத்து நிறுத்திய கர்ப்பிணி பெண்ணை டிராக்டரை ஏற்றி கொன்ற கொடூரம்!