India
உடைக்கப்பட்ட ஜன்னல்..வீடு புகுந்து மருத்துவர் குடும்பத்தை தாக்கிய நோயாளிகள்.. இதற்கா இப்படி செய்தார்கள் ?
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியிலுள்ள சங்கவி என்ற பகுதியில் மருத்துவர் யுவராஜ் கெய்க்வாட் என்பவர் தனது வீட்டின் அருகே கிளினிக் ஒன்றை நடத்திவருகிறார். செப்டம்பர் 6-ம் தேதி அங்கு மருத்துவர் யுவராஜ் தனது குடும்பத்தினருடம் சேர்ந்து வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டின் காதலை சில வேகமாக தட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவரின் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை சிலர் உடைத்துள்ளனர். மேலும் வீட்டின் கதவையும் உடைக்க முயன்றுள்ளனர். பின்னர் மருத்துவர் யுவராஜ் மற்றும் அவரின் மகன் சேர்ந்து கதவை திறந்துள்ளனர்.
அப்போது ஆவேசமாக உள்ளே நுழைந்த கும்பல் மருத்துவரையும், அவரது மகனையும் தாக்கியுள்ளனர். பின்னர் இதுதொடர்பாக மருத்துவர் யுவராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் நடத்திய விசாரணையில் மருத்துவர் யுவராஜின் கிளினிக்கை திறக்க நேரமானதால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் ஆத்திரமடைந்து மருத்துவரை தாக்கியது தெரியவந்தது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலிஸார் அனில் ஜக்தாப், விஸ்வஜீத் ஜக்தாப், அசோக் ஜக்தாப், பூஷண் ஜக்தாப் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ஆய்வாளர்களுக்கான உதவித் தொகை வழங்குவதில் ஏன் தாமதம்? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்த பதில்!