India
பஞ்சாப்: தூங்க விடாமல் அழுது கொண்டே இருந்த குழந்தை.. ஆத்திரத்தில் தாய் செய்த கொடூரச் செயல்!
பஞ்சாப் மாநிலம், லூதியானா பகுதியைச் சேர்ந்தவர் ரூபிந்தர் கவுர். இவர் கணவனைப் பிரிந்து தனது தாய் வீட்டில் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ரூபிந்தர் கவுரியின் 3வது குழந்தை ஹர்மன் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது.
இது ரூபிந்தர் கவுருக்கு எரிச்சலடைய வைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டிலிருந்து மண்பெணண்ணெய்யை எடுத்து குழந்தை ஹர்மன் மீது ஊற்றிப் பற்ற வைத்துள்ளார்.
பின்னர் குழந்தையின் உடல் முழுவதும் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு உடனே தீயை அணைத்து குழந்தையை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு 50% தீக்காயத்துடன் குழந்தைக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தாய் ரூபிந்தர் கவிரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!
-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடரும் பாலியல் குற்றச்சாட்டு : போராடிய மாணவர்கள் மீது தடியடி!
-
25 ஆண்டுகள் - பிரதமர் மோடியின் அடையாளம் இதுதான் : முரசொலி தலையங்கம்!