India
நீரில் மூழ்கி உயிரிழந்த மகன்.. உயிர்ப்பிக்க பெற்றோர் செய்த விசித்திர செயல்.. அதிர்ந்து போன அதிகாரிகள் !
கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். 10 வயது சிறுவனான இவர் அந்த பகுதியில் இருக்கும் குட்டையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதன்பின்னர் கிராம மக்கள் அந்த சிறுவனின் சடலத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைந்தனர். மகன் இறந்த சோகத்தில் இருந்த பெற்றோர் சடலத்தை உப்பு குவியத்தில் வைத்தால் சிறுவன் உயிரோடு வருவான் என்று நம்பியுள்ளனர்.
இதனால் உப்பு குவியலை சேர்ந்து அதில் தனது மகனின் சடலத்தை கிடத்தியுள்ளனர். சுமார் நூறு கிலோவுக்கு மேல் உப்பை எடுத்து தில் மகனின் சடலத்தை முழுவதுமாக மூடி, தலை மட்டும் வெளியே தெரியும்படி வைத்துள்ளனர்.
சுமார் எட்டு மணி நேரம்சிறுவனின் சடலம் அந்த உப்பு குவியலில் இருந்த நிலையிலும் சிறுவன் உயிர்த்தெழவில்லை. இந்த நிலையில், இது தொடர்பான தகவல் அறிந்த போலிஸார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் பின்னர் பெற்றோர்களும் சிறுவன் உயிரெழுவான் என்ற நம்பிக்கையை இழந்த நிலையில், சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!