India
கேரளா :திருமணம் நடந்த 2 மாதங்களில் ஆசை மனைவி விளக்கால் அடித்து கொலை.. கணவன் செய்த செயலால் அதிர்ச்சி..
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலை பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (வயது 35). இவருக்கும் ஆலப்புழா பகுதியை சேர்ந்த நிகிதா (வயது 25) என்ற இளம்பெண்ணும் கடந்த ஜூலை மாதம் திருமணமானது.
இவர்களுக்கு திருமணம் முடிந்து இத்தனை நாட்களுக்கு பிறகு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் வர்க்கலை பகுதிக்கு இருவரும் வந்திருந்தனர். இங்கு அவர்களது வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் இரவு இருவருக்குள்ளும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் இருவருக்குள்ளும் முற்றிப்போக, ஆத்திரமடைந்த அனீஷ், அருகிலிருந்த விளக்கை எடுத்து தனது மனைவி நிகிதாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் இரத்த வெள்ளத்தின் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து நிகிதாவின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில், அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
நிகிதாவின் மேல் ஏற்பட்ட சந்தேகத்தினால் தான், அனீஷ் அவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் இறந்துபோன நிகிதாவின் கணவர் அனீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதங்களில் ஏற்பட்ட சண்டையில் கணவர் மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!