India
குளியல் வீடியோ எடுத்து மிரட்டல்.. பக்கத்து வீட்டுக்காரர் செயலால் பெண் அதிர்ச்சி -உபி-யில் அரங்கேறிய அவலம்
உத்திரபிரதேச மாநிலம் காலியாபாத் பகுதியில் 28 வயதுடைய இளம்பெண் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் 32 வயதுடைய இளைஞர் ஒருவரும் வசித்து வந்துள்ளார். அது வாடகை வீடு என்பதால் இரு வீட்டிற்கும் குளியலறை, கழிவறை ஒன்றாக தான் இருக்கிறது.
இந்த நிலையில், அந்த இளைஞருக்கு பணத்தேவை இருந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த அவர், இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை அந்த பெண்ணுக்கு அனுப்பி தனக்கு ரூ.1 லட்சம் கொடுக்கும்படியும், கொடுக்கவில்லை என்றால் வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
முதலில் இவர் மிரட்டலுக்கு பயப்படாத அந்த பெண், பிறகு பயந்து போய் தனக்கு ஒரு வாரம் அவகாசம் வேண்டுமென்று கேட்டுள்ளார். பின்னர் அவர் சைபர் கிரைம் போலிசை அணுகி புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றவாளியான அந்த இளைஞர் வீட்டிற்கு சென்றனர்.
அங்கே சென்று அவர்கள் விசாரிக்கையில், இளைஞர் தப்பியோட முயன்றுள்ளார். இதையடுத்து அவரை துரத்தி மடக்கி பிடித்த அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய பக்கத்து வீட்டுக்கார இளைஞரின் செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
7-வது முறையாக.. மகளிர் டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு தொடரும் சோகம்!
-
மக்களுக்கு வழங்கும் ‘பை’யில் கூட ஊழல்! : த.வெ.க.வின் முகமூடியை கிழித்து காய வைத்த பெண்!
-
பிரேசிலின் நம்பிக்கை... இறுதி விசிலுடன் உடைந்த கனவு - கண்ணீரில் முடிந்த நெய்மரின் உலகக் கோப்பை பயணம்!
-
கோவையில் 1000 சவரன் நகை திருட்டு : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
-
“ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?” : தி.மு.க கடும் கண்டனம்!