India
குளியல் வீடியோ எடுத்து மிரட்டல்.. பக்கத்து வீட்டுக்காரர் செயலால் பெண் அதிர்ச்சி -உபி-யில் அரங்கேறிய அவலம்
உத்திரபிரதேச மாநிலம் காலியாபாத் பகுதியில் 28 வயதுடைய இளம்பெண் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் 32 வயதுடைய இளைஞர் ஒருவரும் வசித்து வந்துள்ளார். அது வாடகை வீடு என்பதால் இரு வீட்டிற்கும் குளியலறை, கழிவறை ஒன்றாக தான் இருக்கிறது.
இந்த நிலையில், அந்த இளைஞருக்கு பணத்தேவை இருந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த அவர், இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை அந்த பெண்ணுக்கு அனுப்பி தனக்கு ரூ.1 லட்சம் கொடுக்கும்படியும், கொடுக்கவில்லை என்றால் வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
முதலில் இவர் மிரட்டலுக்கு பயப்படாத அந்த பெண், பிறகு பயந்து போய் தனக்கு ஒரு வாரம் அவகாசம் வேண்டுமென்று கேட்டுள்ளார். பின்னர் அவர் சைபர் கிரைம் போலிசை அணுகி புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றவாளியான அந்த இளைஞர் வீட்டிற்கு சென்றனர்.
அங்கே சென்று அவர்கள் விசாரிக்கையில், இளைஞர் தப்பியோட முயன்றுள்ளார். இதையடுத்து அவரை துரத்தி மடக்கி பிடித்த அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய பக்கத்து வீட்டுக்கார இளைஞரின் செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !
-
பிரசாரத்தின்போது மோடி முகத்தை மறைத்த வேட்பாளர்... மோடி கொடுத்த Ultimate Reaction - பின்னணி என்ன?