India
"மாணவிகளை Shift போட்டு வீட்டு வேலை செய்ய சொன்ன ஆசிரியை.." - பாஜக ஆளும் மாநில பள்ளிகளின் அவலம் !
கர்நாடக மாநிலம் துமகுரு பகுதியில் மொரார்ஜி தேசாய் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பணியாற்றும் பெண் ஆசிரியர் ஒருவர், மாணவிகளை தனது சொந்த வேலைக்காக பயன்படுத்தி வந்துள்ளார்.
அந்த வகையில் 10-ம் வகுப்பு மாணவிகளை தனது வீட்டில் வந்து வேலை செய்ய ஆசிரியர் உத்தரவிட்டிருந்தார். இதனால் மாணவிகள் இது குறித்து தலைமையாசிரியரிடம் புகாரளித்தனர். ஆனால் அவரோ கண்டுகொள்ளாமல் இருந்ததால் இந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை இணை இயக்குநரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து சம்பவத்தன்று திடீரென்று ஆசிரியர் வீட்டில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு மாணவிகளை கண்டுள்ளனர். மேலும் ஆசிரியர் வீட்டில் மாணவிகள் சிலர் துணி துவைத்தும், சாப்பிட்ட பாத்திரங்களை விலக்கி கொடுத்தும், சமைத்தும், வீட்டை துடைத்தும், அவரின் கைக்குழந்தையை கவனித்தும் கொண்டிருந்தனர்.
இதனை கண்ட அதிகாரிகள் ஆசிரியரை கையும் களவுமாக பிடித்தனர். அதோடு மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறும்போது, "ஆசிரியர் எங்களை வீட்டு வேலைக்காக தினமும் பயன்படுத்திக் கொள்வார். அதுவும் shift முறையில் வேலை செய்ய சொல்வார்; வகுப்பிற்கும் சரியாக வரமாட்டார். இது குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் மதிப்பெண்ணை குறைத்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்" என்று கண்ணீர் மல்க கூறினர்.
இதையடுத்து பள்ளி மாணவிகளை தனது வீட்டு வேலைக்காக பயன்படுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கர்நாடக பள்ளிகல்வித்துறைக்கு சமூக நலத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் இது குறித்து பெற்றோர்களும் பள்ளியில் புகார் தெரிவித்துள்ளனர். மாணவிகளை ஆசிரியரே shift முறைப்படி வீட்டு வேலை செய்ய வற்புறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!