India
அதிகாலையில் நடந்த கோர விபத்து.. 2 குழந்தை உட்பட 9 பேர் உடல் நசுங்கி பலி: 14 பேர் கவலைக்கிடம்!
கர்நாடக மாநிலம், பாழேன ஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் லாரி ஒன்று ஜீப் மீது மோதியுள்ளது. இதில் ஜீப் வாகனத்தில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 பேர் பெங்களூருவிற்கு ஜீப்பில் பயணம் செய்துள்ளனர். இவர்களது வாகனம் பாழேன ஹள்ளி அருகே வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்த 9 பேரில் 3 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவர்.
மேலும், காயமடைந்த 14 பேரும் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அதேபோல் குரூசர் வாகனத்திலிருந்தவர்கள் அனைவரும் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!