India

அதிகாலையில் நடந்த கோர விபத்து.. 2 குழந்தை உட்பட 9 பேர் உடல் நசுங்கி பலி: 14 பேர் கவலைக்கிடம்!

கர்நாடக மாநிலம், பாழேன ஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் லாரி ஒன்று ஜீப் மீது மோதியுள்ளது. இதில் ஜீப் வாகனத்தில் பயணம் செய்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 பேர் பெங்களூருவிற்கு ஜீப்பில் பயணம் செய்துள்ளனர். இவர்களது வாகனம் பாழேன ஹள்ளி அருகே வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்த 9 பேரில் 3 பெண்கள், 2 குழந்தைகள் அடங்குவர்.

மேலும், காயமடைந்த 14 பேரும் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அதேபோல் குரூசர் வாகனத்திலிருந்தவர்கள் அனைவரும் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Also Read: 'பயப்படாதே, தைரியமாக இரு'.. தந்தை இறந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு மகள் கைக்குக் கிடைத்த உருக்கமான கடிதம்!