India
ரூ.17 லட்சம் மதிப்புள்ள Cadbury Chocolate திருட்டு: சிசிடிவி கேமராவையும் கையோடு எடுத்து சென்ற கும்பல்!
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ அருகே சின்ஷாட் பகுதி உள்ளது. இங்கு சாக்லேட் குடோன் ஒன்று உள்ளது. இதன் உரிமையாளராக ராஜேந்திர சிங் சித்து என்பவர் உள்ளார்.
இந்நிலையில், சாக்லேட் குடோனில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள கேட்பரி சாக்லேட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருடர்கள் குறித்து தகவல்களைப் பொதுமக்கள் தெரிவித்து உதவ வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்துக் கூறிய குடோன் உரிமையாளர் ராஜேந்திரன், "குடோனுக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் செல்போனில் தொடர்பு கொண்டு கதவு உடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதையடுத்து அங்குச் சென்றுபார்த்தபோது குடோனில் இருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள சாக்லேட்டுகள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. மேலும் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்" என தெரிவித்துள்ளார். ரூ.17 லட்சம் மதிப்புள்ள கேட்பரி சாக்லேட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!