India
பிரபல பாடகர் மீது இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார்.. ஆடை வடிவமைப்பாளரின் புகாரால் பரபரப்பில் பாலிவுட் !
மும்பையில் வசித்து வரும் இளம் பெண் இளம்பெண் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் காவல் நிலையத்தில் பாலிவுட் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான ராகுல் ஜெயின் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த கடிதத்தில், ராகுல் ஜெயின் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியதாகவும், அதில் தனது ஆடை வடிவமைப்பு பணிகளை வெகுவாக பாராட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது திறமையால் தனது தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக நியமிப்பதாக ராகுல் ஜெயின் வாக்குறுதி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
சம்பவத்தன்று தன்னை மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்ததால் அவரை சந்திக்க சென்றதாகவும், அப்போது வீட்டை சுற்றிக் காட்டுகிறேன் என்று கூறி தன்னை படுக்கை அறைக்கு சென்றதாகவும் கூறியுள்ளார். அங்கு சென்றதும் கதவை அடைத்த அவர் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், அதை நான் எதிர்த்தபோது என்னை கடுமையாக தாக்கியதாகவும், இதன் பின்னர் ஆதாரங்களை அவர் அழிக்க முயற்சி செய்வதால் அவர் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை பாடகர் ராகுல் ஜெயின் மறுத்துள்ளார். இது பொய்வழக்கு என்றும் அந்த பெண் யார் என்பதே எனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். பாடகர் ராகுல் ஜெயின் மீது, பாலியல் பலாத்காரம், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர் மீது இன்னும் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த தகவல் வெளியாகி பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!