India
இனி வாடகை வீட்டிற்கு 18% GST வரி விதிப்பா?.. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது என்ன?
இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்கள் பயன்படுத்தி வரும் அத்தியாவசிய பொருட்களுக்கு எல்லாம் GST வரி விதித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட அரசி, தயிர், கோதுமை மாவு, பருப்பு, உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5% GST வரி விதித்துள்ளது. ஆனால் பணம் உள்ளவர்கள் மட்டுமே வாங்கும் வைரத்திற்கு 5% வரி தான் வித்துள்ளது. இந்த வேறுபாடான GST வரி விதிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அண்மையில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத் தொடரில் கூட உணவுப் பொருட்கள் மீதான GST வரி குறித்து விவாதிக்க வேண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் ஒன்றிய அரசு இது குறித்து விவாதிக்காமல் எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது.
இந்நிலையில் வீட்டு வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதித்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் , ‘அன்றாட உணவுப் பொருட்களுக்கு GST வரி விதித்த பிறகு இப்போது வீட்டு வாடகைக்கும் GST வரி விதிக்கப்பட்டுள்ளது’என ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இதற்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால், அதற்கு GST வரி வரி கிடையாது. அதேநேரம் வர்த்தக பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால்தான் 18 சதவீத GST வரி விதிக்கப்படும். மேலும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளரோ, பங்குதாரரோ ஒரு குடியிருப்பைத் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு வாடகைக்கு எடுத்தால் GST கிடையாது’ என்று தெரிவித்துள்ளது.
Also Read
-
”இந்தியாவிற்கு போர் நெருக்கடி.. எங்கோ நடக்கும் போர் என்று வேடிக்கை பார்க்க முடியாது” : முரசொலி தலையங்கம்!
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!