India
மருமகளுக்காக யாரும் செய்யாத காரியத்தை செய்த மாமியார்.. நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன ?
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஈஷ்வர்பாய் பிமானி. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகன் சச்சின் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மித்தல் என்பவருக்கும் திருமணமானது. தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஒருநாள் பால் கறக்கும் மின்கருவி மூலம் இவர், தன் வீட்டு தொழுவத்தில் பால் கறந்துகொண்டிருந்த சச்சின் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து தனது மாமியார், குழந்தைகள் உள்ளிட்டோருடன் மித்தாலி வாழ்ந்து வந்துள்ளார்.
கணவருடன் குடும்பமாக வாழ வேண்டிய வயதில் இப்படி ஆகி விட்டதே என்று தனது மருமகளை குறித்து மாமியார் ஈஷ்வர்பாய் கவலை கொண்டார். எனவே ஒரு மகனை தத்தெடுத்து தனது மருமகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் மாமியார். இது குறித்து மித்தாலியிடம் கூறியபோது முதலில் மறுப்பு தெரிவித்த அவர், மாமியார் குழந்தைகளுக்காக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து தத்தெடுக்க மகனை தேடிய மாமியாருக்கு அவரது சமூகம், உறவினர்கள் என்று அனைவரும் உறுதுணையாக இருந்தனர். அவர்கள் உதவியோடு 35 வயதான யோகேஷ் என்பவரை தத்தெடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து யோகேஷின் பெற்றோர்கள் சம்மதத்துடன் யோகேஷை மகனாக தத்தெடுத்துள்ளார் ஈஷ்வர்பாய்.
பின்னர் யோகேஷ் மற்றும் மித்தலுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில், தனது இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக யோகேஷ் தெரிவித்துள்ளார். மாமியார் - மருமகள் மத்தியில் தனது மருமகளுக்காக ஒரு மகனை தத்தெடுத்து திருமணம் செய்து வைத்துள்ள மாமியாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!