India
கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போன மனைவி.. மனைவியை சமாதானப்படுத்த leave கேட்ட அரசு ஊழியர்..
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்ஷாத் அகமத். அந்த பகுதியல் அரசு ஊழியராக இருந்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர் தனக்கு 3 நாள் விடுப்பு வேண்டுமென தனது மேலதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த விடுப்பிற்கான காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, "அண்மையில் எனக்கும் எனது மனைவிக்கும் சிறிய சண்டை ஏற்பட்டது. அந்த சண்டையின் காரணமாக அவர் எனது 3 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். எனவே அவரை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வர நான் செல்லவுள்ளேன். இதன்காரணமாக வரும் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நான் விடுப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று எழுதியுள்ளார்.
இது தொடர்பான கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த கடிதம் தொடர்பாக பலரும் தங்களது கருத்தை பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர். கோபித்து கொண்டு போன மனைவியை சமாதானப்படுத்தி திருப்பி அழைத்து வர கடிதம் மூலம் விடுமுறை கேட்ட கணவனின் செயல் அனைவர் மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!