India
கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போன மனைவி.. மனைவியை சமாதானப்படுத்த leave கேட்ட அரசு ஊழியர்..
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்ஷாத் அகமத். அந்த பகுதியல் அரசு ஊழியராக இருந்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர் தனக்கு 3 நாள் விடுப்பு வேண்டுமென தனது மேலதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த விடுப்பிற்கான காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, "அண்மையில் எனக்கும் எனது மனைவிக்கும் சிறிய சண்டை ஏற்பட்டது. அந்த சண்டையின் காரணமாக அவர் எனது 3 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். எனவே அவரை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வர நான் செல்லவுள்ளேன். இதன்காரணமாக வரும் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நான் விடுப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று எழுதியுள்ளார்.
இது தொடர்பான கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த கடிதம் தொடர்பாக பலரும் தங்களது கருத்தை பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர். கோபித்து கொண்டு போன மனைவியை சமாதானப்படுத்தி திருப்பி அழைத்து வர கடிதம் மூலம் விடுமுறை கேட்ட கணவனின் செயல் அனைவர் மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!