India
கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போன மனைவி.. மனைவியை சமாதானப்படுத்த leave கேட்ட அரசு ஊழியர்..
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்ஷாத் அகமத். அந்த பகுதியல் அரசு ஊழியராக இருந்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர் தனக்கு 3 நாள் விடுப்பு வேண்டுமென தனது மேலதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த விடுப்பிற்கான காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, "அண்மையில் எனக்கும் எனது மனைவிக்கும் சிறிய சண்டை ஏற்பட்டது. அந்த சண்டையின் காரணமாக அவர் எனது 3 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். எனவே அவரை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வர நான் செல்லவுள்ளேன். இதன்காரணமாக வரும் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நான் விடுப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று எழுதியுள்ளார்.
இது தொடர்பான கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த கடிதம் தொடர்பாக பலரும் தங்களது கருத்தை பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர். கோபித்து கொண்டு போன மனைவியை சமாதானப்படுத்தி திருப்பி அழைத்து வர கடிதம் மூலம் விடுமுறை கேட்ட கணவனின் செயல் அனைவர் மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
Also Read
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!