India
பள்ளிக்குச் சென்ற சிறுவன்.. விரட்டி விரட்டி துரத்திய தெரு நாய்கள்: காரணம் என்ன?
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவு சுற்றித் திரிந்து வருகின்றன. இதனால் அப்பதி மக்கள் மற்றும் சுற்றுலாத்துறையினருக்குப் பெரிய அச்சமாக உள்ளது.
இதனால் தெருநாய்களைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற சிறுவனைத் தெருநாய்கள் துரத்திய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருபட்டினம் பெரிய மரக்கையார் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு வந்து கொண்டிருந்த சிறுவனை மூன்று நாய்கள் கடிப்பதுபோல் துரத்தியுள்ளது.
இதனால் பதற்றமடைந்த சிறுவன் அங்கிருந்து ஓடியுள்ளார். இருப்பினும் தெரு நாய்கள் சிறுவனை விடாமல் துரத்தியுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் நாயைக் கல்லால் அடித்துத் துரத்தியுள்ளனர்.
இது சம்மதமான வீடியோவும் வெளியாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உடனே தெருநாயைப் பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
Also Read
-
மீண்டும் தி.மு.க ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : உறுதிபடுத்திய ABP நாடு கருத்துக்கணிப்பு!
-
“தொகுதி மறுவரையறை பா.ஜ.க-வின் அரசின் அரசியல் சதித் திட்டம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!
-
🔴LIVE : சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம் – கேரளம், புதுச்சேரி, அசாம் வாக்குப்பதிவு நிலவரம்!
-
குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை தந்துவிட்டது : அப்போ எடப்பாடி பழனிசாமிக்கு? - முரசொலி தலையங்கம்!
-
“தரம்கெட்டுப் பேசும் பழனிசாமிக்கு மக்களே தக்க பதிலடி கொடுப்பார்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!