India
பள்ளிக்குச் சென்ற சிறுவன்.. விரட்டி விரட்டி துரத்திய தெரு நாய்கள்: காரணம் என்ன?
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவு சுற்றித் திரிந்து வருகின்றன. இதனால் அப்பதி மக்கள் மற்றும் சுற்றுலாத்துறையினருக்குப் பெரிய அச்சமாக உள்ளது.
இதனால் தெருநாய்களைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற சிறுவனைத் தெருநாய்கள் துரத்திய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருபட்டினம் பெரிய மரக்கையார் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு வந்து கொண்டிருந்த சிறுவனை மூன்று நாய்கள் கடிப்பதுபோல் துரத்தியுள்ளது.
இதனால் பதற்றமடைந்த சிறுவன் அங்கிருந்து ஓடியுள்ளார். இருப்பினும் தெரு நாய்கள் சிறுவனை விடாமல் துரத்தியுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் நாயைக் கல்லால் அடித்துத் துரத்தியுள்ளனர்.
இது சம்மதமான வீடியோவும் வெளியாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உடனே தெருநாயைப் பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
Also Read
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!