India
பா.ஜ.க MP-க்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்த டெல்லி போலிஸ்: மன்னிப்பு கேட்ட மனோஜ் திவாரி!
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சுதந்திர தினத்தைப் பெருமையாகக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகளையும் பா.ஜ.க வினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சுதந்திர தின விழாவை முன்னிட்டு மக்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் DP-யாக தேசிய கொடியை வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து பிரதமரும் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தேசியக் கொடியை DP-யாக வைத்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க-வினர் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசியக் கொடி ஏந்தி இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்றனர். இதில் நாடாளுமன்ற பா.ஜ.க எம்.பி-க்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து டெல்லி போலிஸார், ஹெல்மெட், லைசன்ஸ், ஒழுங்கான நம்பர் பிளேட் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக பா.ஜ.க எம்.பி மனோஜ் திவாரிக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு மன்னிப்பு கேட்பதாகவும், இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது கட்டாயம் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என கேட்டுக் கொள்வதாக மனோஜ் திவாரி ட்விட் செய்துள்ளார். மேலும் போலிஸாரின் அபராத தொகையைச் செலுத்துவதாகவும் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
Also Read
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் : பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
“வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!
-
புதுப்பொலிவு பெற்ற தமிழ்நாடு ஆவணக்காப்பகம்: Japanese Tissue முறையை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி