India
ஒரே மாதத்தில் 22 லட்ச இந்திய வாட்சப் கணக்குகள் முடக்கம்.. அதிரடி காட்டிய வாட்சப் நிறுவனம் !
முகநூல், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் சட்டம்) விதிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசு கொண்டு வந்தது.
இந்த விதிகளில் 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள், சமூக வலைதள புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அறிக்கைகளை வாட்சப் நிறுவனம் மாதந்தோறும் இந்திய அரசிடம் சமர்ப்பித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் மட்டும் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி சுமார் 22.10 லட்ச வாட்சப் பயனாளர்களின் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வாட்சப் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி விதிமீறல்கள் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையிலும் விதிமீறல்களை கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 18.05 லட்ச கணக்குகளையும், ஏப்ரல் மாதம் 16 லட்ச கணக்குகளையும், மே மாதம் 19 லட்ச கணக்குகளையும் விதிகள் மீறல்கள் புகாரின் அடிப்படையில் முடக்கிய வாட்சப் நிறுவனம் ஜூன் மாதம் 22 லட்சத்து 10 ஆயிரம் வாட்சப் கணக்குகளை முடக்கியுள்ளது இந்தியர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!