India
ஆந்திர முன்னாள் முதல்வர் NTR மகள் திடீர் தற்கொலை.. முதற்கட்ட விசாரணையில் போலிஸார் சொன்னது என்ன?
ஆந்திரப் பிரதேசம் ஹைதராபாத் ஜூப்ளிஹில்ஸில் பகுதியில் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகள் உமா மகேஸ்வரி வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டிலிருந்த சிகிச்சை எடுத்துவந்த உமா மகேஸ்வரி இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ஜூப்ளிஹில்ஸ் பகுதி காவல் ஆய்வாளர், போலிஸார் நடத்திய முயற்கட்ட விசாரணையில் இதுவொரு தற்கொலை. விசாரணைக்கு பின்னர் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவரும் எனத் தெரிவித்துள்ளார். என்.டி.ஆர். மகள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!