India
9 வயது மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்.. வெளிவந்த அதிர்ச்சி வீடியோ !
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஆசிரியர் ஜினேந்திர மோக்ரா என்பவர் 3ம் வகுப்பு மாணவி (9 வயது) ஒருவரை அழைத்து எண்களை தொடர்ந்து கூறுமாறு கூறியுள்ளார்.
அந்த சிறுமியும் ஆசிரியர் கூறியதுபோல 34-வது எண் வரை சரியாக சொல்லிய அந்த மாணவி பின்னர், 35-வது எண்ணை சொல்வதில் தடுமாறியுள்ளார். இதனால் கோவம் அடைந்த அந்த ஆசிரியர் அந்த மாணவியை தாக்கியுள்ளார்.
மாணவியின் கன்னத்தில் அடுத்தடுத்து தாக்கிய அவர், பின் மாணவியின் பின்தலையிலும் அடித்துள்ளார். தொடர்ந்து மாணவி தனது இடத்துக்கு சென்ற போதும் பின்வந்து அவரை தாக்கியுள்ளார்.
இந்த சம்பவங்களை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் அந்த ஆசிரியரை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதன்பின்னர் சம்மந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
காசா மீதான இறுதிக்கட்ட தாக்குதலுக்கு தயாரான இஸ்ரேல் : ரஃபாவிலிருந்து வெளியேறிய 3 லட்சம் பாலஸ்தீனியர்கள் !
-
”இந்தியா கூட்டணி ஆட்சியில் இளைஞர்களின் கனவு நனவாகும்” : ராகுல்காந்தி உறுதி!
-
”காஷ்மீரில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்படாதது ஏன்?” : ப.சிதம்பரம் கேள்வி!
-
”பா.ஜ.க ஆட்சி அமைக்க பூஜ்ஜியம் சதவீதம் மட்டுமே வாய்ப்பு” : அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!
-
ரஷ்ய படைகள் மீது உக்ரைன் படைகள் திடீர் தாக்குதல் : ஒரே நாளில் உயிரிழந்த 1,740 ராணுவ வீரர்கள் !